Home நாடு “நன்கொடையா? ஆதாரம் காட்டுங்கள்” நஜிப்புக்கு மகாதீர் மீண்டும் சவால்

“நன்கொடையா? ஆதாரம் காட்டுங்கள்” நஜிப்புக்கு மகாதீர் மீண்டும் சவால்

1136
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று கோலாலம்பூருக்கு வருகை தந்த சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் அடல் அகமட் அல் ஜூபிர், முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் வங்கிக் கணக்குக்கு அனுப்பப்பட்ட 2.6 பில்லியன் ரிங்கிட் தொகை சவுதி அரசாங்கத்தின் நன்கொடையல்ல என்றும் அதற்கும் சவுதி அரசாங்கத்திற்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்றும் கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து உடனடியாகப் பதிலளித்த நஜிப், அந்தப் பணம் சவுதி அரசாங்கத்தின் நன்கொடைதான் என்றும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து இன்று சனிக்கிழமை பத்திரிக்கையாளர்கள் பிரதமர் துன் மகாதீரிடம் கேள்வி எழுப்பியபோது, “நன்கொடை என்றால் அதற்கான ஆதாரத்தை நஜிப் காட்ட வேண்டும். சவுதி வெளியுறவு அமைச்சர் அல்லது நஜிப் இருவரில் யாரை நான் நம்புவது என்பது முக்கியமல்ல. அந்தப் பணம் 1எம்டிபியின் பணமா அல்லது சவுதி அரசாங்கத்தின் பணமா என்பதற்கான எழுத்துபூர்வமான ஆதாரம் காட்டப்பட வேண்டும். அதுவே முக்கியம்” என்று கூறினார்.

சவுதி வெளியுறவு அமைச்சர் அல் ஜூபிர் மகாதீரைச் சந்தித்தபோது…(படம்: நன்றி – துன் மகாதீர் டுவிட்டர் பக்கம்)
#TamilSchoolmychoice

ஆனால், இதே சவுதி வெளியுறவு அமைச்சர்தான் 2016-ஆம் ஆண்டில் நஜிப்புக்கு அனுப்பப்பட்ட அந்தப் பணம் சவுதி அரசாங்கத்தின் உண்மையான நன்கொடை என அறிவித்திருந்தார்.

ஆனால், தற்போது தனது நிலைப்பாட்டில் தலைகீழாக மாறியிருக்கிறார்.

இதற்கிடையில் 1எம்டிபி ஊழல் மற்றும் 2.6 பில்லியன் நன்கொடை என்ற இரு விவகாரங்களிலும் மலேசிய அரசாங்கத்துக்கு சவுதி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அல் ஜூபிர் தெரிவித்துள்ளார்.