தற்போதைய கோயிலின் நிர்வாகத் தலைவர்கள், கோயிலின் நிர்வாகத்திலிருந்து விலகிக் கொண்டு, சட்டபூர்வமான பொதுமக்கள் கொண்ட குழு ஒன்று இக்கோயிலின் நிர்வாகத்தை இயக்க வேண்டுமென்று மலேசிய இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் உள்ளதாக அவர் கூறினார்.
கடந்த நவம்பர் 29-ம் தேதி, அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) டோமி தோமஸ், தங்களது சர்ச்சைக்குத் தீர்வு காண அனைத்து தரப்புகளையும் அவர்களைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர்களை சந்திக்க தயாராக இருப்பதாக கூறியிருந்தார் என வேதமூர்த்தி குறிப்பிட்டார்.
மலேசிய இந்து சங்கம் இந்த கோயில் விவகாரத்தில் ஒரு நடுவராக செயல்படுவதற்கான அவசியம் தேவையில்லை, ஏனெனில் மத்திய மற்றும் மாநில அளவிலான குழுக்கள் ஏற்கனவே இவ்விவகாரத்தில் கோயிலின் நலனை பாதுகாப்பதில் வழிமுறைகளை கையாண்டுள்ளதாக மேலும் அவர் கூறினார்.