இதுவரையிலும், இவ்விவகாரம் குறித்து 24 பேர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளன. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நீதிபதி முகமட் இக்வாமன் முகமட் நாசிர் முன்னிலையில் வாசிக்கப்பட்டது. ஆயினும், மணிமாறனும் இதர ஐவரும் இக்குற்றங்களை ஒப்புக் கொள்ளவில்லை.
மணிமாறன் மீது மூன்று குற்றங்கள் சாட்டப்பட்டன, அதாவது, அரசாங்க ஊழியரை வேலை செய்ய விடாமல் தடுத்தது, கலவரத்தில் ஈடுபட்டது, மற்றும் மற்றவர்களுக்கு காயம் ஏற்படக் காரணமாயிருந்தது என மூன்று குற்றங்கள் அவர் மீது சாட்டப்பட்டன. இதர ஐவரும், ஆயுதங்கள் ஏந்தியதற்கான குற்றத்தை எதிர்நோக்கியிருக்கின்றனர்.