நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் வாக்குமூலம் வழங்க கோலதிரெங்கானுவில் உள்ள மாநில ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வந்தபோது அந்த சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.
தனது தொகுதியில் 32 நிகழ்ச்சிகளை நடத்தியதாகக் கூறி, வட்டார நில அலுவலகம் மற்றும் ஊராட்சி மன்றத்திடமிருந்து நிதி கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்து அந்த சட்டமன்ற உறுப்பினர் பணத்தைப் பெற்றார் என நம்பப்படுகிறது. ஆனால் அந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை.
இன்று திங்கட்கிழமை கோலதிரெங்கானு அமர்வு நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அந்த சட்டமன்ற உறுப்பினரின் தடுப்புக் காவலை நீட்டிக்கும் விண்ணப்பத்தை ஊழல் தடுப்பு ஆணையம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.