முதல் பாதி ஆட்டத்தில் பந்து வீசிய மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலியா 150 ஓட்டங்கள் எடுப்பதற்கு முன்பாகவே 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. அதைத் தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் வெகு சுலபமாக இந்த ஆட்டத்தில் வென்று விட முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வலுவான ஆஸ்திரேலியா அணியின் ஆட்டக்காரர்கள் நின்று நிதானமாக விளையாடி, 49-வது ஓவருக்குள் 10 விக்கெட்டுகளையும் இழந்தாலும் 288 ஓட்டங்கள் எடுத்து சாதனை புரிந்தனர்.
இதுவும் ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
எனினும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்கள் நிறைவடைந்தபோது 9 விக்கெட்டுகளை இழந்து 273 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனைத் தொடர்ந்து 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றதாக அறிவிக்கப்பட்டது.
எதிர்வரும் ஜூன் 9-ஆம் தேதி நடைபெறும் தனது அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா இந்தியாவைச் சந்திக்கிறது.
இன்று வெள்ளிக்கிழமை உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளின் வரிசையில் பாகிஸ்தானும் இலங்கையும் மோதுகின்றன.