இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அடுத்து, வசதி படைத்த குடும்பங்களே, இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் மற்றும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து, நேற்று வெள்ளிக்கிழமை தனது சொந்த ஊரான காத்தான்குடியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில், ஜும்மா தொழுகைக்கு பின்னர் அவர் உரையாற்றுகையில் இந்தத் தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து, கிழக்கு மாகாண ஆளுனராகப் பதவி வகித்த ஹிஸ்புல்லா உள்ளிட்ட இரண்டு முஸ்லிம் ஆளுனர்கள் மற்றும் ஒன்பது முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகினர்.