ஜூன் மாதம் 23-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி அளவில் பிரிக்பீல்ட்ஸ், துன் சம்பந்தன் சாலை 3, தேசிய வங்கி ஊழியர் சங்கக் கட்டடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி சிறப்பு வருகையாளராகக் கலந்து கொள்கிறார்.
டத்தோ டோமினிக், டாக்டர் வீ.செல்வரத்தினம், டாக்டர் சைட் உசேன் அலி, மலேசிய சோசலிசக் கட்சியைச் சேர்ந்த அருட்செல்வன், சமூகவாதியும் இலக்கியவாதியுமான ஜானகிராமன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கருத்துரை ஆற்ற உள்ளனர்.
சிற்றுண்டியுடன் தொடங்கும் இந்த நிகழ்ச்சி தொடர்பான மேல் விவரம் அறிய ஹிண்ட்ராப் சிலாங்கூர் மாநிலத் தலைவர் சி.மணிமாறனுடன்(012-2658144) தொடர்பு கொள்ளலாம்.