Home One Line P1 கொவிட்-19: கூடுதல் 600 மில்லியன் சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டது!

கொவிட்-19: கூடுதல் 600 மில்லியன் சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டது!

452
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 நோய் தடுப்பு போராட்டத்திற்கு உதவுவதற்காக அரசாங்கம் கூடுதல் 600 மில்லியன் ரிங்கிட்டை சுகாதார அமைச்சகத்திற்கு வழங்கவுள்ளது என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று திங்கட்கிழமை அறிவித்தார்.

நேரடியாக ஒளிபரப்பப்பட்ட செய்தியாளர் கூட்டத்தின் போது பேசிய அவர், கொவிட் -19 தொற்று சங்கிலியை உடைப்பதற்கான முயற்சிகளுக்கு 500 மில்லியன் ரிங்கிட் செலவிடப்படும் என்று கூறினார். கூடுதல் செயற்கை உயிர்ப்பு அமைப்புகள், தீவிர சிகிச்சை பிரிவு உபகரணங்கள், கொவிட் -19 சோதனையை நடத்துவதற்கு தொழிலாளர்கள் மற்றும் ஆய்வக சாதனங்கள், மருத்துவத்திற்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) வாங்குதல் ஆகியவை இதில் அடங்கும்.

#TamilSchoolmychoice

“இந்த முக்கியமான பொருட்களை வாங்குவதை விரைவுபடுத்துவதற்காக, அரசாங்கம் அவசரகால கொள்முதல் நடைமுறைகளைப் பயன்படுத்தும்,” என்று அவர் கூறினார்.

மற்றொரு 100 மில்லியன் ரிங்கிட் 2,000 ஒப்பந்த ஊழியர்களை, குறிப்பாக செவிலியர்களை பணியமர்த்துவதற்கு உபயோகிக்கப்படும் என்று அவர் கூறினார்.