கடந்த ஒரு நாளில் இன்று 50 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 10,919- ஆகவும், குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,835- ஆகவும் உள்ளது.
புதிய சம்பவங்களில், 146 உள்ளூர் தொற்றுகளாகும். 4 தொற்றுகள் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவங்களாகும்.
இன்று ஒருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து இறப்பு எண்ணிக்கை 134- ஆக உள்ளது.
இதைத் தொடர்ந்து நாட்டில் கொவிட்-19 தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 950 ஆக அதிகரித்துள்ளது. 6 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 4 பேர் சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் பெந்தெங் எல்டி தொற்றுத் திரள் மூலம் 58 தொற்றுகள் பரவியிருக்கிறது.
இதனிடையே, வாக்களிப்பு நேற்று சனிக்கிழமை முடிந்த நிலையில் சபாவில் இருந்து மேற்கு மலேசியா திரும்புவோர் கொவிட்19 பரிசோதனைக்கு உட்படுத்தபடுவார்கள் என்று நூர் ஹிஷாம் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.
தற்போதைய நிலைமையை கணக்கில் எடுத்துக்கொண்டு, சபா பயண வரலாற்றைக் கொண்ட நபர்களால் கொவிட்19 நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் கூறினார்.
இன்று செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 10 வரை, சபாவிலிருந்து வரும் அனைத்து நபர்களிடமும் கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இந்த பயணிகள் தொற்றிலிருந்து விடுபடுவதை உறுதிசெய்ய இரண்டு வாரங்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.