658 தொற்றுகள் உள்ளூர் தொற்றுகளாகும். ஒருவர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்.
இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 31,548 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
529 தொற்றுகளுடன் அதிக தொற்றுகளைக் கொண்ட மாநிலமாக சபா இருந்து வருகிறது. சிலாங்கூரில் 55 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
இன்று அதிகமாக 1,000 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறி உள்ளனர். மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 21,248 – ஆக உயர்ந்துள்ளது.
சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இந்த விவரங்களை வெளியிட்டார்.
மொத்தம் 10,051 பேர் மருத்துவமனைகளில் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 89 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர், 19 பேருக்கு சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
இன்று மரணங்கள் எதுவும் பதிவு செய்யப்பட்டவில்லை. இதைத் தொடர்ந்து மொத்த மரணங்களின் எண்ணிக்கை 249- ஆக நிலைத்துள்ளது.