அனைத்துலக அளவில் மலேசியா, இந்தியா, வங்காளதேசம், பிரிட்டன், அமெரிக்கா, ரஷியா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து இந்தக் கொண்டாட்டத்தில் 6,538 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சி மிக அதிகமானோர் இணையம் வழி கலந்து கொண்ட மெய்நிகர் நிகழ்ச்சியாக மலேசிய சாதனைப் புத்தகத்தில் (Malaysian Book of Records) இடம் பெற்றிருக்கிறது.
இதற்கு முன்னர் இந்த சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்த தீபாவளி நிகழ்ச்சியில் 1,360 பேர் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர். அந்த சாதனையை முறியடிக்கும் விதமாக, நவம்பர் 1 கிருஷ்ணா விழிப்புணர்வு மையம் நடத்திய நிகழ்ச்சியில் 6,538 பேர் கலந்து கொண்டிருக்கின்றனர்.
ஜெயபதக சுவாமிகள் இஸ்கோன் இயக்கத்தின் நிர்வாக ஆணையத்தின் மூத்த உறுப்பினராவார். இஸ்கோன் இயக்கத்தைத் தோற்றுவித்த தெய்வத்திரு ஶ்ரீல ஏ.சி.பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதாவின் நேரடி சிஷ்யர்களில் ஜெயபதக சுவாமிகள் ஒருவராவார்.
உலக அமைதிக்காகவும், மனிதர்களுக்கிடையே அன்பை விதைக்கவும், கொவிட்-19 பாதிப்புகளிலிருந்து உலகமும், மக்களும் சீக்கிரமே மீள்வதற்காகவும் உலக மக்களை ஒன்றிணைக்க, மேற்கண்ட மெய்நிகர் தீபாவளி ஒன்றுகூடல் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் இறைவன் கிருஷ்ணரை பக்தியுடன் வேண்டி விளக்கேற்றி சமர்ப்பணம் செய்தனர்.
ஒவ்வோர் ஆண்டும் இந்த காலகட்டத்தில் ஒரு மாதம் முழுவதும் மலேசிய இஸ்கோன் இயக்கம் பள்ளிகளிலும் பல கல்வி நிலையங்களிலும் இலவச நூல்கள் வழங்குவது, உணவுகள் விநியோகிப்பது, அன்பளிப்புகள் வழங்குவது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். சமூகத்தின் ஆன்மீக, மனநல, உடல்நல நோக்கங்களுக்காக இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அந்த நிகழ்ச்சி தொடர்பான சில படக் காட்சிகளை இங்கே காணலாம்: