இவற்றில் உள்ளூர் தொற்றுகள் 839 ஆகும். வெளிநாட்டு தொற்றுகள் 13 ஆக அடையாளம் காணப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 40,209 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
இதனிடையே, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 28,234 ஆக உயர்ந்துள்ளது.
இன்னமும், 11,689 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 94 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 32 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இன்று 4 பேர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 286-ஆக உயர்ந்துள்ளது.