இதில் உள்ளூரில் 2,641 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 2 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் பெறப்பட்டதாகும்.
இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 131,108 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
இன்னும், 25,140 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 170 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 82 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இன்று ஒரேநாளில் 16 பேர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 537-ஆக உயர்ந்துள்ளது.
அதிகபடியாக சிலாங்கூரில் 1,086 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. சபாவில் 401 சம்பவங்கள் பதிவான நிலையில், ஜோகூரில் 298 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கோலாலம்பூர் மற்றும் கெடாவில் முறையே 282 மற்றும் 107 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.