Home One Line P1 மக்கள் மொகிதின் யாசினுக்கு ஆதரவளிக்க வேண்டும்

மக்கள் மொகிதின் யாசினுக்கு ஆதரவளிக்க வேண்டும்

452
0
SHARE
Ad
வான் சைபுல் வான் ஜான்

கோலாலம்பூர்: பெர்சாத்து தகவல் தொடர்புத் தலைவர் வான் சைபுல் வான் ஜான், பிரதமர் மொகிதின் யாசினுக்கு ஆதரவளிக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

பெர்சாத்து தலைவர் நேற்று வெளியிட்ட பெர்மாய் பொருளாதார ஊக்கத் திட்டம் வாயிலாக, அவர் எப்போதும் மக்களின் பிரச்சனைகளுக்கு உதவுவதற்கும், தீர்ப்பதற்கும் வழிகளைத் தேடுகிறார் என்பதை நிரூபிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களை கவனித்துக்கொள்வதிலும், பொருளாதாரத்தை மீளுருவாக்கம் செய்வதிலும், மொகிதினின் அர்ப்பணிப்பு, அவர் ஒரு பிரதமர் என்பதைக் காட்டுகிறது என்றும், அவர் எப்போதும் மக்களையும், நாட்டையும் முதலிடத்தில் வைத்துள்ளார் என்பதையும் காட்டுகிறது என்றும் வான் சைபுல் கூறினார்.

#TamilSchoolmychoice

“பெர்சாத்து, அரசாங்கத்தை மக்கள் மற்றும் நாட்டில் மீது தொடர்ந்து கவனம் செலுத்தவும், விமர்சனங்களை புறக்கணிக்கவும் கேட்டுக்கொள்கிறது. நாட்டை கவனித்துக்கொள்வதில் டான்ஸ்ரீ மொகிதினின் நேர்மையையும், அவருக்கும் அவர்களின் தனிப்பட்ட நலன்களை மட்டுமே கவனிப்பவர்களுக்கும் உள்ள பெரிய வித்தியாசத்தையும் மக்கள் தெளிவாகக் காண முடியும் என்று பெர்சாத்து நம்புகிறது.

“டான்ஸ்ரீ மொகிதின் மற்றும் அரசாங்கத்தின் முயற்சிகளை முழுமையாக ஆதரிக்க பெர்சாத்து அனைத்து தரப்பினரையும் அழைக்கிறது,” என்று வான் சைபுல் கூறினார்.

ஜனவரி 13- ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைத் தொடர்ந்து மலேசியர்களுக்கு உதவ பெர்மாய் சிறப்பு உதவித் தொகுப்பை மொகிதிடின் நேற்று அறிவித்தார்.