கடந்த மாதம் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர், மியான்மாரில் 38 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியதற்கு இன்னும் மியான்மார் எந்தவொரு கருத்தும் வெளியிடவில்லை.
பிப்ரவரி 1 இராணுவ சதித்திட்டத்தை ஏற்க மறுத்தும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத் தலைவர் ஆங் சான் சூகியை விடுவிக்கவும், இந்த போராட்டங்கள் நடந்து வருகின்றன.
“எங்களை எப்போது வேண்டுமானாலும் நேரடி தோட்டாக்களால் சுட்டுக் கொல்லலாம் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், ஆட்சிக்குழுவின் கீழ் உயிருடன் இருப்பதற்கு எந்த அர்த்தமும் இல்லை,” என்று ஆர்வலர் மௌங் சாங்கா ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
வரலாற்று சிறப்புமிக்க கோயில் நகரமான பாகன் உட்பட வேறு இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர். அங்கு நூற்றுக்கணக்கானோர் சூகியின் படங்களையும், “எங்கள் தலைவரை விடுவிக்கவும்” என்று பதாகையையும் சுமந்து சென்றனர்.