இன்றைய மரண எண்ணிக்கையைத் தொடர்ந்து இதுவரையிலான மரணங்களின் எண்ணிக்கை 1,994 ஆக உயர்ந்திருக்கிறது.
புதிய தொற்றுகளின் எண்ணிக்கை ஒருநாளில் 4,865 ஆக மீண்டும் உயர்ந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து நாட்டில் இதுவரையில் பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 479,421 ஆக உயர்ந்திருக்கிறது.
தொற்றுகளில் இருந்து குணமடைந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,497 ஆக இருந்தது. இதைத் தொடர்ந்து இதுவரையில் கொவிட் தொற்றுகளில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 432,600 ஆக உயர்ந்தது.
512 தொற்றுகளுடன் சரவாக் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மற்ற மாநிலங்கள் வாரியான தொற்றுகளின் எண்ணிக்கையை மேற்காணும் வரைபடத்தில் காணலாம்.
கோலாலம்பூரில் மட்டும் 477 தொற்றுகள் பதிவாகி இருக்கின்றன. இன்றைய மொத்த ஒருநாள் தொற்றுகளில் ஏறத்தாழ பாதி தொற்றுகள் சிலாங்கூர், கோலாலம்பூர் மாநிலங்களில் பதிவானவை ஆகும்.