இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை 587,165- ஆக உயர்ந்துள்ளது.
மொத்தம் பதிவான 7,703 தொற்று சம்பவங்களில் 7,701 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 2 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.
கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 82,274 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 878 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 441 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.
கடந்த ஒரு நாளில் மரண எண்ணிக்கை அதிகமாக 126-ஐ தொட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரண எண்ணிக்கை 2,993-ஆக உயர்ந்திருக்கிறது.
மிக அதிகமான தொற்றுகளை சிலாங்கூர் மீண்டும் பதிவு செய்தது. 2,728 தொற்றுகளை சிலாங்கூர் பதிவு செய்தது. அதனை அடுத்து கோலாலம்பூரில் 701 தொற்றுகள் பதிவாயின. அடுத்த நிலையில் 588 தொற்றுகளை சரவாக் பதிவு செய்துள்ளது. ஜோகூரில் 554 சம்பவங்களும், கிளந்தானில் 541 சம்பவங்களும் பதிவாகி உள்ளன.