இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை 595,374- ஆக உயர்ந்துள்ளது.
மொத்தம் பதிவான 8,209 தொற்று சம்பவங்களில் 8,145 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 64 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.
கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 83,331 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 880 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 446 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.
கடந்த ஒரு நாளில் மரண எண்ணிக்கை 103-ஐ தொட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரண எண்ணிக்கை 3,096-ஆக உயர்ந்திருக்கிறது.
அதனை அடுத்து கோலாலம்பூரில் 801 தொற்றுகள் பதிவாயின. அடுத்த நிலையில் 594 தொற்றுகளை சரவாக் பதிவு செய்துள்ளது. நெகிரி செம்பிலானில் 576 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.