மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 667,876 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
சிலாங்கூரில் மட்டும் 1,996 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதற்கிடையில் கொவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 6,831 -ஆக பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 593,695-ஆக உயர்ந்திருக்கிறது.
கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 70,112 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 922 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 450 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.
கடந்த ஒரு நாளில் மரண எண்ணிக்கை 101-ஐ தொட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரண எண்ணிக்கை 4,069-ஆக உயர்ந்திருக்கிறது.
கோலாலம்பூரில் 650 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.