Home நாடு கொவிட்-19: புதிதாக 5,419 சம்பவங்கள் பதிவு- 101 பேர் மரணம்

கொவிட்-19: புதிதாக 5,419 சம்பவங்கள் பதிவு- 101 பேர் மரணம்

353
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 5,419 கொவிட் -19 சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 667,876 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

சிலாங்கூரில் மட்டும் 1,996 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

#TamilSchoolmychoice

மொத்தம் பதிவான 5,419 தொற்று சம்பவங்களில் 5,413 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 6 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.

இதற்கிடையில் கொவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 6,831 -ஆக பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 593,695-ஆக உயர்ந்திருக்கிறது.

கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 70,112 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 922 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 450 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

கடந்த ஒரு நாளில் மரண எண்ணிக்கை 101-ஐ தொட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரண எண்ணிக்கை 4,069-ஆக உயர்ந்திருக்கிறது.

கோலாலம்பூரில் 650 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.