Home நாடு கொவிட்-19: மரணங்களின் எண்ணிக்கை 87 – தீவிர சிகிச்சை பிரிவில் 959 பேர்!

கொவிட்-19: மரணங்களின் எண்ணிக்கை 87 – தீவிர சிகிச்சை பிரிவில் 959 பேர்!

1852
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை ஜூலை 10 வரையிலான ஒரு நாளில் நாடு முழுமையிலும் 87 மரணங்கள் பதிவாயின. அதே வேளையில் மேலும் 959 பேர் நாடு முழுவதிலும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக, கொவிட் மரண எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் வாய்ப்புகள்ளதாக கருதப்படுகிறது.

இன்றைய ஒருநாள் மரணங்களைத் தொடர்ந்து நாட்டில் பதிவாகியிருக்கும் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்து 6,067 ஆக உயர்ந்தது.

#TamilSchoolmychoice

மரணமடைந்தவர்களில் ஆண்கள் 52 பேர், பெண்கள் 35 பேர்.  மரணமடைந்தவர்களில் 8 பேர் மரணத்துக்குப் பின்னரே மருத்துவமனைகளுக்குக் கொண்டுவரப்பட்டனர்.

நேற்றைய ஒருநாளில் மரணமடைந்தவர்களில் ஒருவர் 30 வயதுக்கும் குறைந்தவராவார்.

மரணமடைந்தவர்களில் 53 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களாவர். 33 பேர் 50-க்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட வயதினர்களாவர்.

ஒருநாள் தொற்றுகளின் எண்ணிக்கை 9,353

ஒருநாள் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக 9 ஆயிரத்தைக் கடந்திருக்கிறது. இன்றைய ஒருநாளில் 9 ஆயிரத்துக்கும் கூடுதலாக அதிகரித்து 9,353 எனப் பதிவாகியது.

இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 827,191 ஆக உயர்ந்திருக்கிறது.

மொத்தம் பதிவான 9,353 தொற்று சம்பவங்களில் 9,342 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 11 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.

கொவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு நாளில் 5,910-ஆக பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 737,103 -ஆக உயர்ந்திருக்கிறது.

கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 84,021 ஆக உயர்ந்திருக்கிறது.

இவர்களில் 959 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 451 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 827,191 ஆக உயர்ந்திருக்கிறது.

இன்று சனிக்கிழமை ஜூலை 10 வரையில் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மொத்தம் 9,353 புதிய தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன. இதில் சிலாங்கூரில் மட்டும் அதில் ஏறத்தாழ பாதி எண்ணிக்கையிலான தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன.

சிலாங்கூர் கடந்த 24 மணி நேரத்தில் 4,277 தொற்றுகளைப் பதிவு செய்தது.

இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 827,191 ஆக உயர்ந்திருக்கிறது.

சிலாங்கூருக்கு அடுத்த நிலையில் கோலாலம்பூர் 1,398 தொற்றுகளோடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

மூன்றாவது இடத்தை 638 தொற்றுகளோடு நெகிரி செம்பிலான் பிடித்திருக்கிறது.