Home உலகம் இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது

இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது

631
0
SHARE
Ad

harryலண்டன், ஜூன். 3- இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் – டயானா தம்பதியின் 2-வது மகன் ஹாரி (வயது 28), இவர் இங்கிலாந்து ராணுவத்தின் விமான படையில் பணிபுரிகிறார்.

இவரை கொலை செய்து விடுவேன் என ஒரு வாலிபர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். அவரது பெயர் அஷ்ரப் இஸ்லாம் ( வயது 30).

மிகவும் பரபரப்பான லண்டனில் உள்ள போலீஸ் நிலையம் சென்ற இவர் தனக்கு குடியிருக்க வீடு இல்லை என புகார் செய்தார். அதற்காக இளவரசர் ஹாரியை கொலை செய்வேன் என்றும் மிரட்டினார். உடனே, அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

#TamilSchoolmychoice

இவர் மீது அஸ்பிரிட்ஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை தொடர்ந்து தண்டனைக்காக இவர் காத்திருக்கிறார். குற்றவாளி அஷ்ரப் இஸ்லாம் மார்க் டவுன்லி பகுதியை சேர்ந்தவர். கொலை மிரட்டல் விடுத்த இவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

Comments