சுகாதாரத் துறை அமைச்சரும் மஇகா தேசிய துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெறும் இவ்விழாவிற்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் சிறப்பு வருகை புரியவுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் தமிழகக் கலைஞர்களுடன் உள்நாட்டுக் கலைஞர்களும் இசை விருந்து படைக்கவிருக்கின்றனர். அத்துடன் காலத்தால் அழியாத பழம் பெரும் பாடல்களுக்கு மக்களின் மனங்களைக் கவரக்கூடிய வகையில் விளங்கங்களும் அளிக்கப்படும்.
இதனைத் தவிர்த்து, விழாவின்போது மலேசியத் திருநாட்டில் தமிழுக்காக தொண்டாற்றிய மூவருக்கு சிறப்பு செய்யப்படும்.
இவ்விழாவிற்கான அழைப்பிதழ்களை முன்கூட்டியே ஏற்பாட்டாளர்கள் வழி பெற்றுக் கொள்ளுமாறு ரசிகப் பெருமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அழைப்பிதழ்களைப் பெற்றுக் கொள்ள 03-79716565 என்ற எண்களுடன் தொடர்பு கொள்ளுமாறு பாண்டித்துரை கேட்டுக் கொண்டார்.