எனவே அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை தற்போது கிரீமியா பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ரஷியா ராணுவத்தின் நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணிக்கிறது. போலந்து, ருமேனியா வான்வெளியில் 3 உளவு விமானங்களை அனுப்பி ரஷியா ராணுவத்தை ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில் உக்ரைன் இறையாண்மையை அத்துமீறியதாக ரஷியாவுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உடனடியாக 1997 ஒப்பந்தத்தின்படி ரஷிய ராணுவம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.