இரு நீதிமன்றங்கள் இரு பெற்றோருக்கும் குழந்தையை பராமரிக்கும் பொறுப்பை அளித்துள்ளதுதான் போலீஸ் இப்புகார் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காததற்கு காரணம் என்று காலிட் வாதித்துள்ளார்.
ஆனால், சுற்றுலாத்துறை அமைச்சர் நஸ்ரி சரியாக சுட்டி காட்டியுள்ளது போல் பாதிப்புக்குள்ளான தீபா போலீசில் புகார் செய்துள்ள இச்சம்பவம் பொது (சிவில்) சட்டத்தின் கீழ் ஒரு தெள்ளத் தெளிவான கடத்தல் சம்பந்தப்பட்டதாகும் – குற்றமாகும் என்பதை குலசேகரன் சுட்டிக்காட்டினார்.
ஆகவே, பிள்ளையைத் தூக்கிச் சென்ற கணவர் மீது ஐஜிபி நடவடிக்கை எடுக்கக் கடமைப்பட்டுள்ளார் என்றும் இந்த விவகாரத்தை அவர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்றால் அவர் நஸ்ரியிடமிருந்து ஆலோசனை பெற வேண்டும் என்றும் குலசேகரன் குறிப்பிட்டார்.
அவர் தமது கடமையை ஆற்றத் தயாராக இல்லை என்றால் சட்டத்தை அமலாக்கம் செய்பவர் என்ற அவரது பணியை கைவிட்டவர் என்று கருதப்படுவார். அத்தகைய சூழ்நிலையில் அவர் போலீஸ் படையின் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் குலசேகரன் காட்டமாகக் கூறியுள்ளார்.