இந்த போட்டியை உலகத்தில் உள்ள கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் நேரிலும் தொலைக்காட்சி மூலமும் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகிறார்கள்.
தீவிர கால்பந்து ரசிகரான நடிகர் மோகன்லால், உலக கால்பந்து போட்டியை இதுவரை தொலைக்காட்சியில் மட்டுமே கண்டு ரசித்து வந்தார். இறுதிப்போட்டியை நேரில் பார்ப்பதற்கு அவர் விரும்பினார்.
“பெருச்சாளி“ என்ற மலையாள திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த அவர், படப்பிடிப்பை சில நாட்கள் நிறுத்திவைத்துவிட்டு, அவர் பிரேசிலுக்கு சென்றுள்ளார். விமான நிலையத்தில் திரளான ரசிகர்கள் திரண்டிருந்து அவரை வழியனுப்பி வைத்தனர்.
நன்றாக விளையாடும் அணி நிச்சயம் வெற்றி வாகைச் சூடும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை“ என்று கூறினார். தொடர்ந்து மோகன்லாலுக்கு ரசிகர்களும், நண்பர்களும் பயணம் வெற்றி பெற வேண்டும் என்று கூறி வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.