அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பின் (என்எஸ்ஏ) இரகசியங்களை அம்பலப்படுத்திய அந்த அமைப்பின் முன்னாள் உளவாளி எர்வர்ட் ஸ்னோடெனை கைது செய்வதற்கு அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை செய்தது.
அமெரிக்காவின் பிடியிலிருந்து தப்பிய ஸ்னோடென் கடந்த ஆண்டு ஹாங்காங்கில் இருந்து கியூபா செல்லும் வழியில் ரஷ்யாவின் அனைத்துலக விமான நிலையத்தில் ஒருமாத காலம் தங்கியிருந்தார்.
இதுகுறித்து ஸ்னோடெனின் வழக்கறிஞர் அனல்டோலி குசிரேனா கூறுகையில், “எட்வர்ட் ஸ்னோடென், ரஷ்யாவில் தாற்காலிகமாக தங்குவதற்கான ஓராண்டு கால அனுமதி ஆகஸ்ட் 1-ம் தேதியுடன் முடிவடைந்தது.
உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் செயல்பாடுகளுக்கு பதிலடி தரும் விதமாகவே ரஷ்யா, ஸ்னோடெனுக்கு இந்த கால நீட்டிப்பை வழங்கியுள்ளதாக கருதப்படுகின்றது.