அப்போது ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராவதற்கு எந்த உரிமையும் இல்லை. அவர் தொடர்ந்து அரசு வழக்கறிஞராக செயல்பட அனுமதிக்கக் கூடாது என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை தினமும் நடத்தும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால் பவானிசிங் அரசு வழக்கறிஞராக தொடர்ந்து செயல்படுவது குறித்து உச்சநீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். அதனால் உச்சநீதிமன்றத்தை நாடும்படி குறிப்பிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து தி.மு.க நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர். அம்மனு இன்று அல்லது நாளை தலைமை நீதிபதி டி.எச்.வகேலா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.