Home இந்தியா கணவரைக் காண சிறையில் இருந்து வெளியே வருகிறார் சசிகலா!

கணவரைக் காண சிறையில் இருந்து வெளியே வருகிறார் சசிகலா!

1001
0
SHARE
Ad

Sasikalaபெங்களூர் – சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விகே.சசிகலாவுக்கு, இன்று செவ்வாய்க்கிழமை பரோல் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகின்றது.

கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை செயலிழந்து தனியார் மருத்துவமனை ஒன்றில் கவலைக்கிடமாக இருந்து வரும் தனது கணவர் நடராஜனைக் காண அவருக்கு 15 நாட்கள் பரோல் அளிக்க வேண்டும் என அவரது சார்பில் வழக்கறிஞர்கள் விண்ணப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.