ஆக்லாந்து ஈடன் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த ஆஸ்திரேலியா – நியூசிலாந்து போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக பிஞ்ச், வார்னர் களமிறங்கினர்.
ஆஸ்திரேலியா 32.2 ஓவரிலேயே 151 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து 50 ஓவரில் 152 ரன் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது.
3-வது வீரராகக் களமிறங்கிய வில்லியம்சன் 45 ரன்னுடனும் (42 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), கடைசி வீரர் போல்ட் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக 4-வது வெற்றியை பதிவு செய்தது நியூசிலாந்து அணி.