எனினும், அந்த வங்கிக் கணக்குகள் யாருடையது என்பது குறித்து தகவல்களை வெளியிட விசாரணைக்குழு மறுத்துள்ளது. அந்த 6 வங்கிக் கணக்குகளின் 3 பிரதமர் நஜிப்புடையது என மலேசியாகினி தெரிவித்துள்ளது.
“ஆமாம், அதில் 3 கணக்குகள் நஜிப்புடையது தான். நாங்கள் மிகக் கவனமாக இந்த விவகாரத்தைக் கையாண்டு வருகின்றோம்” என்று அந்த விசாரணைக் குழுவிற்கு மிகவும் தொடர்புடைய இடத்தில் இருந்து தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக மலேசியாகினி குறிப்பிட்டுள்ளது.
பேங்க் நெகாரா, காவல்துறை, சட்டத்துறைக் குழு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஆகியவை கடந்த 4 நாட்களாக நடத்திய விசாரணையின் முடிவில் தற்போது 6 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.