Home நாடு மஇகாவின் வேட்புமனுத் தாக்கல்கள் இன்றும் நாளையும் திட்டமிட்டபடி தொடரும் – சுப்ரா அறிவிப்பு

மஇகாவின் வேட்புமனுத் தாக்கல்கள் இன்றும் நாளையும் திட்டமிட்டபடி தொடரும் – சுப்ரா அறிவிப்பு

492
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 11 – நேற்று தொடங்கிய  மஇகா கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் சுமுகமாக நடைபெற்று வருவதாகவும், இன்றும் நாளையும் திட்டமிட்டபடி வேட்புமனுத் தாக்கல் தொடர்ந்து நடைபெறும் என்றும் மஇகா இடைக்காலத் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரா அறிவித்துள்ளார்.

subra-health-dentists-1வேட்புமனுத் தாக்கல்கள் சுமுகமாக நடைபெற்று வருவதையும், பெரும்பாலான கிளைகள் திரண்டு வந்து வேட்புமனுத் தாக்கல்கள் செய்வதையும் கண்டு பொறுக்காத ஒரு சில தரப்புகள், இன்றும் நாளையும் நடைபெறும் வேட்புமனுத் தாக்கல்கள் ஒத்தி வைக்கப்பட்டதாக, விஷமத் தனமான சில குறுஞ்செய்திகளை செல்பேசிகளிலும், நட்பு ஊடகங்களிலும் பரப்பி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, மஇகா கிளைத் தலைவர்களுக்கு இன்று தான் அனுப்பிய செல்பேசி மூலமான குறுஞ்செய்தியில் டாக்டர் சுப்ரா இன்றும் நாளையும் வேட்புமனுத் தாக்கல்கள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

நேற்று கெடா, கிளந்தான், திரெங்கானு மாநிலங்களில் உள்ள மஇகா கிளைகளின் வேட்புமனுத் தாக்கல்கள் நடைபெற்று முடிந்தன. இதில் கெடா மாநிலத்தில் மட்டுமே சுங்கைப்பட்டாணியில் ஒரு சில அசம்பாவிதங்கள் நடந்தன.

இன்று, மலாக்கா, ஜோகூர், பேராக் ஆகிய மாநிலங்களில் உள்ள கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் நடைபெறுகின்றன.

நாளை ஞாயிற்றுக்கிழமை ஜூலை 12ஆம் தேதி சிலாங்கூர், பினாங்கு, பெர்லிஸ், கூட்டரசுப் பிரதேசம், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் நடைபெறுகின்றன.