Home உலகம் பாரிஸ் நகரில் பேரங்காடியில் புகுந்த கொள்ளையர்கள் – 10 பேரை பிணை பிடித்துள்ளனர்!

பாரிஸ் நகரில் பேரங்காடியில் புகுந்த கொள்ளையர்கள் – 10 பேரை பிணை பிடித்துள்ளனர்!

672
0
SHARE
Ad

primark-store-parisபாரிஸ், ஜூலை 13 – பாரிஸ் நகரில் உள்ள பேரங்காடி ஒன்றில் இன்று மதியம் புகுந்த துப்பாக்கி ஏந்திய கொள்ளையர்கள், 10-க்கும் மேற்பட்டவர்களை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தற்போது அங்கு குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினர், அவர்கள் பிணை பிடித்து வைத்துள்ள கடை ஊழியர்களை விடுவிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

“காலை 6.30 மணியளவில் (மலேசிய நேரப்படி மதியம் 1.30), இரண்டு அல்லது மூன்று ஆயுதமேந்திய கொள்ளையர்கள், குவார்ட்ஸ் மால் என்ற வணிக வளாகத்திலுள்ள பிரிமார்க் ஸ்டோருக்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.” என்று அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

மேலும் விரிவான செய்திகள் தொடரும்..