Home வணிகம்/தொழில் நுட்பம் சிஐஎம்பி வங்கியின் தலைமை நிர்வாகி பேட்லிஸ்யாஹ் பதவி விலகுவதாக அறிவிப்பு!

சிஐஎம்பி வங்கியின் தலைமை நிர்வாகி பேட்லிஸ்யாஹ் பதவி விலகுவதாக அறிவிப்பு!

517
0
SHARE
Ad

BadlisyahAGகோலாலம்பூர், ஜூலை 15 – சிஐஎம்பி இஸ்லாமிய வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து விலகுவதாக பேட்லிஸ்யாஹ் அப்துல் கானி தெரிவித்துள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு முதல் தலைமை நிர்வாகியாக பதவி வகித்து வந்த  பேட்லிஸ்யாஹ், சமீபத்தில் 1எம்டிபி விவகாரம் தொடர்பாக பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இந்நிலையில், அவரின் பதவி விலகல் அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பேட்லிஸ்யாஹ் விலகலை உறுதிபடுத்தி உள்ள சிஐஎம்பி வங்கி, எதிர்வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல், அவரின் பதவி விலகல் நடைமுறைக்கு வரும் என்றும், புதிய நிர்வாகியை தேர்ந்தெடுக்கும் வரை நிர்வாக பொறுப்புகளை முகமட் ஷாஃப்ரி ஷாகுல் ஹமிட் கவனித்துக் கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி பேட்லிஸ்யாஹ் கூறுகையில், “இந்த தருணத்திற்காக நீண்ட நாட்களாய் காத்திருந்தேன். எனது வாழ்க்கையில் நிகழ வேண்டிய முக்கியமான மாற்றம் இது. இடைப்பட்ட காலத்தில் நடந்த சில சம்பவங்கள் இந்த முடிவை விரைவாக எடுக்க வைத்துவிட்டன” என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த சில நாட்களுக்கு முன்பு 1எம்டிபி விவகாரத்தில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல், பிரதமர் நஜிப் மீது குற்றம்சாட்டி இருந்த சம்பவத்தின் போது, பிரதமருக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக பேட்லிஸ்யாஹ், பேஸ்புக்கில் சில பதிவுகளை வெளியிட்டு இருந்தார். எனினும், அவரின் பதிவுகள் அவருக்கு எதிராகவே திரும்பியது குறிப்பிடத்தக்கது.