Home இந்தியா ஜெயலலிதா உடல்நிலை பற்றி அவதூறு செய்தி வெளியீடு: ரெடிப் தலைமை அதிகாரிக்குச் சம்மன்

ஜெயலலிதா உடல்நிலை பற்றி அவதூறு செய்தி வெளியீடு: ரெடிப் தலைமை அதிகாரிக்குச் சம்மன்

431
0
SHARE
Ad

jayalalithaசென்னை,ஜூலை 20-  ஜெயலலிதா உடல்நிலை பற்றிச் செய்தி வெளியிட்ட ரெடிப் இணையதளத் தலைமை அதிகாரிக்குச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா உடல்நிலை குறித்து ஜுலை 10-ஆம் தேதி அவதூறாகச் செய்தி வெளியிட்டதாக ஜெயலலிதா சார்பில் ரெடிப் இணையதளம் மீது, வழக்கறிஞர் ஜெகன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதி, ரெடிப் இணையதளத் தலைமை அதிகாரி ஆகஸ்ட் 24-ல் நீதிமன்றத்திற்கு நேரில் வந்து விளக்கம் தர வேண்டும் என்று உத்தரவிட்டார்.

#TamilSchoolmychoice

இதற்கான சம்மன் அவருக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது.

.