இந்நிலையில்,சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியசாமி மீது அவதூறு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
‘டூவிட்டர் இணையதளம் பக்கத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்த சுப்பிரமணியசாமி, முதல்-அமைச்சரின் உடல் நலம் குறித்துத் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளார்.எனவே, அவர் மீது குற்றவியல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கு நீதிபதி ஆதிநாதன் முன்பு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கிறது.