Home இந்தியா இப்ராஹிம் ராவுத்தர் மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல்

இப்ராஹிம் ராவுத்தர் மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல்

478
0
SHARE
Ad

jayalalithaசென்னை, ஜூலை 23- திரைப்படத் தயாரிப்பாளரும், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நண்பரும், அதே சமயம் அதிமுக நட்சத்திரப் பேச்சாளருமான இப்ராஹிம் ராவுத்தர் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

“இப்ராஹிம் ராவுத்தர் தலைமைக்கழகப் பேச்சாளராக, கட்சியின் கொள்கைகளையும் அதிமுக அரசின் சாதனைகளையும், எதிர்க்கட்சியின் பொய்ப் பிரச்சாரங்களையும் நாட்டு மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைத்தவர் ஆவார்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும்  தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.

#TamilSchoolmychoice

ஜெயலலிதா சார்பில் அமைச்சர் பா.வளர்மதி, ராஜேந்திர பாலாஜி, அப்துல் ரஹீம் ஆகியோர் இப்ராஹிம் ராவுத்தர் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.