Home இந்தியா அப்துல் கலாம் மறைவு: 7 நாட்கள் தேசிய துக்கமாக இந்தியா அறிவிப்பு!

அப்துல் கலாம் மறைவு: 7 நாட்கள் தேசிய துக்கமாக இந்தியா அறிவிப்பு!

463
0
SHARE
Ad

abdul kalamபுது டெல்லி, ஜூலை 27 – முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் மறைவிற்கு இந்திய அரசு 7 நாட்கள் துக்கம் அனுசரித்துள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இன்று மேகாலயாவின் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரின் மறைவிற்கு இந்திய அரசு , 7 நாட்கள் தேசிய துக்கமாக அறிவித்துள்ளது. நாளை பாராளுமன்றம் கூடி துக்க அனுசரிப்பு நிகழ்வினை நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழக அரசு நாளை, பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு சார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

(மேலும் விரிவான செய்திகள் தொடரும்)