அவர் இதை தெரிவித்தபோது மக்கள் கைதட்டி ஆரவாரித்தனர்.
ஆஸ்ட்ரோ கட்டணம் குறைப்பது சாத்தியமான ஒன்றே
அன்வார் மேலும் கூறுகையில், அம்னோ மற்றும் தேசிய முன்னணி ஆதரவாளர்கள் தங்கள் ஆக்கிரமிப்பை ஆஸ்ட்ரோவில் குறைத்தாலே ஆஸ்ட்ரோ கட்டணம் குறைப்பது நிச்சயம் சாத்தியப்படக்கூடிய ஒன்றே என்றார் அவர்.
“ஆஸ்ட்ரோவின் லாபம் 2011ஆம் ஆண்டைவிட 2012இல் 30 கோடி கூடுதலாக, அதாவது 280இலிருந்து 310 கோடியாக உயர்ந்துள்ளது. எனவே மக்கள் கூட்டணி அரசில் ஆஸ்ட்ரோவின் கட்டணத்தை குறைப்பதால் அந்த நிறுவனம் திவாலாகிவிடாது” என்றார் முன்னாள் நிதியமைச்சருமான அன்வார் இப்ராஹிம்.
டான்ஸ்ரீ ஆனந்தகிருஷ்ணனுடன் பேசுவோம்.
மக்கள் கூட்டணி புத்ராஜெயாவை கைப்பற்றினால், நிச்சயமாக இரண்டே வாரத்தில் தற்போது ஆஸ்ட்ரோ நிறுவனத்தில் 43 விழுக்காடு பங்குகளை வைத்திருக்கும் ஆனந்த கிருஷ்ணனை சந்தித்து அதன் கட்டணத்தை குறைக்கச்சொல்வோம் என்று உறுதியளித்தார் அன்வார்.