Home கலை உலகம் மும்பைத் தாக்குதல் பற்றிய இந்திப் படம் ஃபாண்டம்: பாகிஸ்தானில் தடை!

மும்பைத் தாக்குதல் பற்றிய இந்திப் படம் ஃபாண்டம்: பாகிஸ்தானில் தடை!

569
0
SHARE
Ad

21-1440106237-21-1440097053-saif-katrina-phantomலாகூர்,ஆகஸ்ட் 21- கடந்த 2008-ஆம் ஆண்டு  நவம்பர் 26-ஆம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்திப் படம்  ஃபாண்டம்.

சயீப் அலிகான், கேத்ரீனா கைஃப் நடிப்பில், கபீர் கான் இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படம் வருகின்ற 28-ஆம் தேதி உலகம் முழுவதிலும் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில், மும்பை  தாக்குதலுக்குக் காரணமான லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சயீத், இப்படம் தனது இயக்கத்திற்கு எதிரான கருத்துக்களைப் பரப்புவதாகக் கூறி, இப்படத்திற்குத் தடை விதிக்கக் கோரி லாகூர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

#TamilSchoolmychoice

இவ்வழக்கு தொடர்பாகப் பதில் கேட்டு பாகிஸ்தான் அரசுக்கு லாகூர் நீதிமன்றம் கடிதம் அனுப்பியது. அதற்குப் பாகிஸ்தான் அரசு, இந்தப் படத்தை வெளியிடும் என்ணம் இல்லை எனப் பதில் தெரிவித்ததால், இப்படத்தைப் பாகிஸ்தானில் வெளியிட லாகூர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.