Home உலகம் உலகை அதிர வைத்த சிரியா அகதிக் குழந்தையின் மரணம்!

உலகை அதிர வைத்த சிரியா அகதிக் குழந்தையின் மரணம்!

623
0
SHARE
Ad

child migrant deathசிரியா – உள் நாட்டுப் போரால், வறுமையால் நாடு விட்டு நாடு ஓடும் அகதிகளின் அவலத்தை ஓர் இறந்த குழந்தையின் புகைப்படம் உலக மக்களின் நெஞ்சத்தில் ஓங்கி அடித்து உணர்த்தியிருக்கிறது.

சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் உயிர் தப்பி ஐரோப்பாவுக்கு அகதியாக இடம்பெயர முயன்ற போது, படகு விபத்தில் சிக்கிக் கடலில் மூச்சுத் திணறிப் பலியான ஒரு கைக் குழந்தையின் உடல், துருக்கி எல்லை அருகே கடற்கரைப் பகுதியில் ஒதுங்கிக் கிடந்தது.

f56a4f4e-b76a-46d6-bf36-f67f3e9300781அக்குழந்தையின் சடலத்தைத் துருக்கி எல்லைக் காவற் படை வீரர் ஒருவர் கையில் ஏந்திச் செல்லும் புகைப்படம் ஒன்று ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

child migrant death2வியட்நாம் கொடுமையை உலகுக்கு உணர்த்திய நிர்வாணச் சிறுமியின் ஒரு புகைப்படம், ஆப்பிரிக்காவின் வறுமையைத் தோலுரித்துக் காட்டிய ஒரு குழ்ந்தையின் புகைப் படம் போன்று உயிரிழந்த இக்குழந்தையின் புகைப் படமும் உலக மக்களை உலுக்கியுள்ளது.

சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரிலிருந்து உயிர் தப்பிக்க, அந்நாட்டு மக்கள் கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாகச் செல்கிறார்கள், அப்படிச் செல்லும் போது படகு கடலில் மூழ்கிப் பலர் பலியாகிறார்கள்.

அப்படி உயிருக்குப் பயந்து ஓடி உயிரை இழக்கும் இப்படிப்பட்ட அகதிகளின் உயிரை ஐரோப்பிய நாடுகள் துச்சமாக எண்ணுகின்றன.அவர்களைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

இந்தக் குழந்தையின் மனதை உலுக்கும் மரணத்தைக் கண்ட பிறகாவது ஐரோப்பிய நாடுகள் மனமிறங்குமா?