Home உலகம் இசைப்பிரியாவை இலங்கை இராணுவம் தான் கொலை செய்தது – ஐநா பரபரப்பு அறிக்கை!

இசைப்பிரியாவை இலங்கை இராணுவம் தான் கொலை செய்தது – ஐநா பரபரப்பு அறிக்கை!

747
0
SHARE
Ad

isaipriya 2கொழும்பு – விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் போராளி இசைப்பிரியா, இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது மிகவும் கோரமான முறையில் கொல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். போரின் போது இவர் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அப்போது கூறினாலும், கடந்த ஆண்டு இசைப்பிரியா குறித்து வெளியான புகைப்படங்கள் மற்றும் காணொளியில் அவர் இலங்கை இராணுவத்தால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. தற்போது அதனை ஐநா விசாரணைக் குழுவும் உறுதி செய்துள்ளது.

இது தொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“இசைப்பிரியா கடந்த 2009–ம் ஆண்டு மே மாதம் 18–ம் தேதி வட்டுக்காவல் பாலத்தின் வடக்கே நந்திக்கடல் பகுதியில் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக ஏராளமான காணொளிகள் மற்றும் புகைப்பட ஆதாரங்கள் உள்ளன.”

#TamilSchoolmychoice

“ஆரம்பத்தில் அவர், பிரபாகரனின் மகள் என இலங்கை இராணுவம் கருதி உள்ளது. அதன் பின்னர் தான் அவர் விடுதலைப் புலிகளின் ஊடகப் போராளி என தெரிய வந்துள்ளது. அவர் கைது செய்யப்பட்ட போது, அவர் போர்த்திக் கொள்வதற்கு மேலாடையை கொடுத்துள்ள இலங்கை இராணுவத்தினர், அதன் பிறகு அவரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி, தலையில் சுட்டு படுகொலை செய்துள்ளனர்”

“மேலும், இலங்கை இராணுவம் திட்டமிட்டே அவரது சடலத்தில் இருந்த ஆடைகளை கலைந்துள்ளது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.