Home One Line P2 விடுதலைப் புலிகளை பயங்கரவாதப் பட்டியலிலிருந்து நீக்க வேண்டாம்! – இலங்கை

விடுதலைப் புலிகளை பயங்கரவாதப் பட்டியலிலிருந்து நீக்க வேண்டாம்! – இலங்கை

722
0
SHARE
Ad

கொழும்பு: “விடுதலைப் புலிகளை வீழ்த்தி அதன் கொடூரமான பயங்கரவாத செயல்பாடுகளுக்கு இலங்கை அரசு முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால், விடுதலைப் புலிகளின் பயங்கரவாத மிச்சங்கள் உலகம் முழுவதும் இருப்பது உலக நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். எனவே விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரிட்டன் அரசு அப்படியே வைத்திருக்கும் என நம்புகிறேன்” என்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகள் எந்த விதமான பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்று, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு பிரிட்டன் உள்துறை அமைச்சகத்திடம் கோரியிருந்தது.

இதனை உள்துறை அமைச்சகம் நிராகரித்த நிலையில், தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான சிறப்பு ஆணையத்திடம் (Proscribed Organisations Appeal Commission) நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேல்முறையீடு செய்தது.

#TamilSchoolmychoice

இதற்கு தீர்ப்பளித்த ஆணையம் விடுதலைப் புலிகள் மீதான பிரிட்டனின் தடை தவறானது என தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்த தீர்ப்பின் அடிப்படையில், அறிக்கை வெளியிட்ட இலங்கை அரசு, விடுதலைப் புலிகள் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது என சிறப்பு ஆணையம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது. இதற்கு டுவிட்டரில் ராஜபக்சே இவ்வாறு பதிவிட்டுள்ளார்.