அது குறித்து டாக்டர் சுப்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு சுகாதாரப் பிரச்சனைகளை சமாளிக்கும் வகையில் அதை எதிர்க்கும் சுகாதார முறைகளை உருவாக்கத் தேவையான வட்டார ஒத்துழைப்பின் விரிவான அனுமுறையின் அவசியம் குறித்த கருத்துகளையும், ஆலோசனைகளையும் தான் வழங்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த 66 வது அமர்வில், 2014-2015-ம் ஆண்டில் இயற்றப்பட்ட திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் செயல்திறன் மற்றும் அனைத்துலக சுகாதாரம் குறித்த ஆய்வுகள், காச நோய், கல்லீரல் தொற்று, உணவுப் பாதுகாப்பு, வெப்பமண்டல நோய் மற்றும் தொழுநோய் ஆகியவை குறித்து கலந்தாலோசிக்கப்படும்.