காரணம், மஇகாவின் தலைமைத்துவத்தை மீண்டும் கைப்பற்ற முனைந்துள்ள பழனிவேல் தரப்பினரின் இறுதிக்கட்டப் போராட்டமாக நாளைய கூட்டரசு நீதிமன்ற மேல்முறையீடு பார்க்கப்படுகின்றது.
தீர்ப்பு என்னவாக இருக்கும்?
கூட்டரசு நீதிமன்ற மேல்முறையீடு என்பதற்கான நடைமுறைகளின்படி, முதலில் இந்த வழக்கு மேல்முறையீட்டுக்கு தகுதியானதுதானா என்பதை ஆராய்ந்து கூட்டரசு நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும்.
அத்தகைய அனுமதிக்கான விசாரணைதான் நாளை நடைபெறுகின்றது.
விசாரணையின் முடிவில் அனுமதி கிடையாது என கூட்டரசு நீதிமன்றம் முடிவு செய்துவிட்டால், அத்துடன் பழனிவேல் தரப்பினரின் நீதிமன்றப் போராட்டம் ஒரு முடிவுக்கு வரும்.
ஆனால், பழனிவேல் தரப்பினர் எதிர்பார்ப்பதுபோல் கூட்டரசு நீதிமன்றம் அனுமதி வழங்க வாய்ப்பிருக்கின்றதா?
கூட்டரசு நீதிமன்றத்தின் அனுமதி கிடைக்குமா?
முன் அனுமதி கோரும் தரப்பினர் இரண்டு அம்சங்களில் வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளைத் திருப்திப்படுத்த வேண்டும்.
முதலாவதாக இந்த வழக்கு பொதுமக்களைப் பாதிக்கக் கூடிய ஒரு வழக்கு, ஒரு பரந்த தரப்பினரைப் பாதிக்கின்ற வழக்கு (Public interest) என்பதை மேல்முறையீடு செய்யும் பழனிவேல் தரப்பினர் நிரூபிக்க வேண்டும். இதனை நிரூபிப்பதில் பழனிவேலு-பாலகிருஷ்ணனின் வழக்கறிஞர்களுக்கு பிரச்சனை இருக்காது என்றே சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர்.
காரணம், 6 இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட மஇகாவைப் பாதிக்கின்ற வழக்கு, ஓர் அரசாங்க இலாகாவான சங்கப் பதிவகத்திற்கு எதிரான வழக்கு என்பதால், இந்த அம்சத்தின் கீழ் கூட்டரசு நீதிமன்றம் முன் அனுமதியை வழங்கும்.
இதிலும் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டால், வழக்கிற்கான முன் அனுமதி வழங்கப்படும். அதன் பின்னர் பின்னொரு தேதியில் முழுவிசாரணை ஐந்து நீதிபதிகளின் முன்னிலையில் நடைபெறும்.
இடைக்காலத் தடையுத்தரவு கிடைக்குமா?
ஆக, நாளை மேல்முறையீடு தொடர்வதற்கு பழனிவேல் தரப்புக்கு முன் அனுமதி கிடைத்தால், அடுத்த வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமைக்குள் பழனிவேலுவின் வழக்கறிஞர்கள், மஇகா தேர்தல்களுக்கு எதிராக இடைக்காலத் தடையுத்தரவு கேட்டு விண்ணப்பிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால் நீதிமன்றம் அத்தகைய இடைக்காலத் தடையுத்தரவை வழங்குமா?
ஆக ஒட்டு மொத்த மஇகாவினரும், கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
கூட்டரசு நீதிமன்றம் முன் அனுமதி வழங்குமா?
அப்படியே கிடைத்தால், முழு விசாரணைக்கு முன்பாக, மஇகா தேர்தல்களுக்கு எதிராக இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை பழனிவேல் தரப்பினர் பெற இயலுமா?
விடைகளுக்காகக் காத்திருக்கின்றது மஇகா!
-இரா.முத்தரசன்