அமெரிக்காவில் சிகாகோ பகுதியை சேர்ந்தவர் மைக்கேல் சேண்டியாகோ. இவருக்கு 3 வயதிலும், 6 வயதிலும் இரு மகன்கள் இருந்தனர். சமீபத்தில், சிறுவர்கள் இருவரும் திருடன்-போலீஸ் விளையாட்டு விளையாடி உள்ளனர். மைக்கேலின் மூத்த மகன், தனது தம்பியை பிடிப்பதற்காக சென்றுள்ளான். அப்போது தான், குளிர்சாதனப் பெட்டியின் மீது மைக்கேல் சேண்டியாகோவின் கைத்துப்பாக்கி, அவன் கண்களில் பட்டுள்ளது. துப்பாக்கியை கையில் எடுத்த அடுத்த சில நொடிகளில், மறைந்திருந்த தனது தம்பியை நோக்கி சுட்டுள்ளான்.
இதற்கிடையே, இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், கவனக்குறைவாக துப்பாக்கி வைத்திருந்ததாக மைக்கேல் சேண்டியாகோவை கைது செய்துள்ளனர். விளையாட்டு விபரீதமாக மாறிய இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.