Home Featured உலகம் மாலி: இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்பு!

மாலி: இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்பு!

619
0
SHARE
Ad

mali1பாமகோ – மாலியின் ரேடிசன் ப்ளு விடுதிக்குள் நூற்றுக்கணக்கானோரை பிணைக்கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ள நிலையில், விடுதிக்குள் அதிரடியாக நுழைந்த இராணுவத்தினர் தீவிரவாதிகளுடன் தாக்குதல் நடத்தி இந்தியர்கள் 20 பேர் உட்பட 80 பேரை பத்திரமாக மீட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. எனினும், இன்னும் 125 பேர் வரை பிணைக்கைதிகளாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

vikasஇந்தியர்கள் மீட்கப்பட்டதை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் டுவிட்டரில் உறுதிப்படுத்தி உள்ளார்.