Home Featured உலகம் முடிவுக்கு வந்த மாலி தாக்குதல் – 27 பேர் பலி!

முடிவுக்கு வந்த மாலி தாக்குதல் – 27 பேர் பலி!

668
0
SHARE
Ad

mali-attack12பனாகோ – மாலியில் உள்ள பிரபல விடுதியான ரேடிசன் ப்ளுவில் நேற்று புகுந்த தீவிரவாதிகள் 170 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். இந்நிலையில் அந்நாட்டு இராணுவம் விடுதிக்குள் அதிரடியாகப் புகுந்த தீவிரவாதிகளுடன் கடும் சண்டையிட்டது. இதில் தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில், இதுவரை 27 பேர் பலியானதாகக்   கூறப்படுகிறது.

இதற்கிடையே இந்த தாக்குதலுக்கு, மாலில் செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்கமான அல் கொய்தா இஸ்லாமிக் மெக்ரப் பொறுப்பேற்றுள்ளது.