Home Featured தொழில் நுட்பம் சென்னை பேரிடர்: பேஸ்புக்கில் பயனர்களுக்காக ‘சேஃப்டி செக் பக்கம்’ திறப்பு!

சென்னை பேரிடர்: பேஸ்புக்கில் பயனர்களுக்காக ‘சேஃப்டி செக் பக்கம்’ திறப்பு!

400
0
SHARE
Ad

facebook_safety_check_page.1jpgசென்னை – வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையின் நிலை கருதி பேஸ்புக் நிறுவனம் ‘சேஃப்டி செக் பக்கத்தை’  (Safety Check Page) திறந்துள்ளது. சென்னையில் வசிக்கும் பேஸ்புக் பயனர்கள், தாங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டால், குறிப்பிட்ட அந்த சேஃப்டி செக் பக்கத்தில் இருக்கும் தங்கள் கணக்கை ‘சேஃப்’ (safe) என மாற்றிக் கொள்ளலாம்.

இதன் மூலம் ஒருவேளை தங்கள் உறவினர்களும், நண்பர்களும் உங்களை தொடர்பு கொள்ளமுடியாத சூழலில் இருந்தால், பேஸ்புக் மூலம் நீங்கள் பாதுகாப்பாக இருப்பதை தெரிந்து கொள்வர்.