இதில் ஆத்திரமடைந்த அவர், திடீரென அருகில் இருந்த வாளை எடுத்து தனது பெற்றோரை சரமாரியாகத் தாக்கி உள்ளார். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். இதையடுத்து வீதிக்கு வந்த அவர், தனது கண்ணில் பட்ட அனைவரையும் சரமாரியாக வெட்டி சாய்த்தார். இதில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், பலத்த காயத்துடன் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேறு வழியில்லாமல் காவல்துறையினர் பல்விந்தரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர், சுருண்டு விழுந்து உயிரிழந்தார். பரபரப்பான சாலையில் நடந்த இந்த சம்பவம், அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.